கோபி, ஆக.31- கோபிசெட்டிபாளையம் அருகே கிரை னைட் தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம், எம்.ஜி.ஆர் சிலை அருகில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் தூக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிரைனைட் தொழிலதிபர் சிவக் குமார் என்பவர் ரூ.25 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்திருந்துள்ளார். அதன் அடிப்படையில் முதல் தவணையாக சனியன்று ரூ.10 லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியே வந்துள்ளார். இதன்பின் தனது காரில் வீடு திரும்பிய நிலையில், கார் தடுமாறியதால் காரை நிறுத்தி கீழே இறங்கி பார்த்துள்ளார். அப்போது காரின் இரண்டு சக்கரங்களில் இருந்த காற்று இறக்கப்பட்டு இருந்தது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர் காரின் முன் இருக்கை யில் வைத்திருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித் துள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் பணம் பறிகொடுக்கப்பட்ட இடம் மற்றும் தப்பியோடிய வீதிகளில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமாராக்களின் படக் காட்சிகளை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடிவரு கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.