tamilnadu

மலைவாழ் இளைஞர் சங்க புதிய கிளை அமைப்பு

ஈரோடு, ஜன. 20- ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த சுஜ்ஜில் கரை, வைத்தியநாதபுரம் பகுதியில் தமிழ்நாடு மலை வாழ் இளைஞர் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட் டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில் புதிய கிளையின் தலைவராக மாதேவன், செயலாளராக அருண், பொருளாளராக சித்தன் ஆகியோர் உட்பட 7 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில், மலைவாழ் இளைஞர் சங்க மாநில தலை வர் எம்.சடையலிங்கம்,  வாலிபர் சங்கத்தின் மாவட்ட  செயலாளர் எம்.சசி, மலை வாழ் இளைஞர் சங்கத்தின் மலைவட்டார தலைவர் சின்னசாமி, பொருளாளர் ரங்கசாமி, தாளவாடி 7 ஆவது வார்டு கவுன்சிலர் எம்.மாதேஷ், சிபிஎம் மலை வட்டார செயலாளர் சி.துரைசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த கிளை அமைப்பு மற்றும் பொதுக்கூட்டத்தில் திரளா னோர் பங்கேற்றனர்.

;