கோபி, பிப். 24- கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள கிராமங்க ளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் ஞாயிறன்று தொடங்கி வைத்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்ட வாணிப்புத்தூர்,கள்ளிப்பட்டி, கணக்கம்பா ளையம் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்ப டுகிறது. இதனை ரூ.13கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி கள்ளிப்பட்டி மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் ஆகிய இரு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறைஅமைச்சர் கே.சி.கருப் பணன் ஆகியோர் மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், கோட் டாட்சியர் ஜெயராமன் குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர் சுதாமகேஸ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.