tamilnadu

img

பணி நிரந்தரம் செய்திடுக துய்மை பணி காவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக். 14- பணி நிரந்தரம் செய்திடக்கோரி கொடு முடியில் தூய்மை பணி காவலர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை காவலர்களுக்கு தினக்கூலி யாக ரூ.400 வழங்கி, அவர்களை பணி நிரந் தரம் செய்ய வேண்டும். சமூக நல திட்டங் கள், தொழிலாளர் நலச் சட்டங்களை அமல் படுத்த வேண்டும். வருடம் இரண்டு செட் உடை, கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும். குறிப்பிட்ட கால இடை வேளையில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தூய்மை காவலர்களை வேறு பணிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை  பணி காவலர்கள் கொடுமுடி வட்டார  வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சண்முகவள்ளி தலைமை வகித்தார். மாநில செயலாளர் அ.பழனிசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட தலைவர் ஆர்.விஜயராகவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.கனக வேல், தாலுகா தலைவர் ஆர்.சிவலிங்கம்,  தூய்மை காவலர்கள் சங்கத்தின் செயலா ளர் நாகமணி, தலைவர் வீரகுமார் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.