கோபி, பிப்.17- கோபிச்செட்டிபாளையத்தில் இடது சாரி கட்சிகளின் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் பேருந்துநிலையத்தில் மத்தியஅரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது எல்ஐசி, வங்கி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் விதமாக உள்ளதாகவும், வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங் கள் எதுவும் இல்லை. ஆகவே, விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கவேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதியை குறைக்கக் கூடாது. நிலுவையில் உள்ள கூலியை உடனடியாக வழங்க வேண்டும். உணவு மானியம், விவசாயம், கல்வி, சுகாதாரம், சமூகநலம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது. வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங் களை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் குணசேகரன், சிபிஎம் மாவட்டசெயலாளர் ரகுராமன், மாவட் டக்குழு உறுப்பினர் திருத்தணிகாசலம், சிபிஐ பரமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.ஆர்.மாணிக்கம் நன்றி கூறினார். இதில் இடதுசாரிகட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு முழக்கங் களை எழுப்பினர்.