tamilnadu

img

மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு இடைக்கால கடன்

 கோபிசெட்டிபாளையம், ஏப்.24-               கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்டபகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் இடைக்கால கடன் வழங்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.  தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ள நிலையில், மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கொரோனா நிவாணத்தொகையாக நீண்டகால கடன் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் 4 சுய உதவிக்குழுவில் உள்ள 50 பெண்களுக்கு கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காலத்தில் வருவாய் ஈட்ட இயலாத சூழ்நிலையில் அவர்களது குடும்ப செலவிற்காக ரூ.5 ஆயிரத்தை யூனியன் பேங்க் ஆப் இந்தியா மூலம் வழங்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.

  மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சுய உதவிக்குழு பெண்களுக்கும் இக்கடன் கிடைக்க வங்கிகளிடம் பேச்சுவார்ததை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இத்தொகையை 6 மாதங்களுக்கு பிறகு மாதம் ரூ.125 மட்டுமே செலுத்தும் வகையிலும், அதற்கான வட்டிகள் இல்லை என்றும் அமைச்ர் தெரிவித்தார்.  அதனை தொடர்ந்து நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ஒரு சிப்பம் அரிசி வழங்கும் நிகழ்வையும் அமைச்சர் தொடக்கி வைத்தார்.