கோபி, மே 24- நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கள் ஜுன் மாதம் இரண்டாம் வாரத் தில் தொடங்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் செய்தியாளார்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், நீட் தேர்வுக்கான பயிற் சிகள் ஜூன் இரண்டாம் வாரத்திலி ருந்து தொடங்கவுள்ளது. 7300 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 100 பேராவது மருத்துவ கல்விக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை உள் ளது. மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட் டுள்ளது. பள்ளிகள் திறப்பு எப்பொ ழுது என்று சூழ்நிலைக்கேற்ப விரை வில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.