ஈரோடு, ஆக. 17- அகில இந்தியத் தொகுப்பில் மருத்துவப் படிப்பிற்கான ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக் கீட்டை வழங்கக்கோரி இந்திய மாண வர் சங்கம் மற்றும் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் ஒரே நுழை வுத்தேர்வு எனக்கூறி நீட் தேர்வை திணித்து ஏழை, எளிய நடுத்தர மாண வர்களின் மருத்துவக் கனவை அழிப் பதை கண்டித்தும், மருத்துவப் படிப்பிற்கான அகில இந்தியத் தொகுப்பில் இதர பிற்படுத்தப் பட்ட(ஓபிசி) மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு மறுத்து வருவதை கண்டித்தும் திங்களன்று இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் தமிழகம் முழுவதும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, ஈரோட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்தில் மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்டத் தலைவர் மா.வினிஷா, மாவட்டச் செயலாளர் கோபிகிருஷ் ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சசி, மாவட்ட பொருளாளர் ஸ்டா லின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிரான முழக்கங் களை எழுப்பினர்.
சேலம்
சேலம் மாவட்டம் சோனா கல்லூரி, சேலம் வடக்கு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.பகத்சிங், துணைத்தலைவர் கண்ணன், வாலிபர் சங்கத்தின் மாந
கர செயலாளர் குரு பிரசன்னா, மாநகர பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் சேரம்பாடி, எருமாடு, அம்பலமூலா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே.சிவபிரகாஷ், மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை மாவட்டத்தில், 15 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், செயலாளர் கே.எஸ்.கனகராஜ், பொருளாளர் சந்திரசேகர் மற்றும் மாணவர் சங்க மாவட்ட தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட் டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் சிலம்பரசன், மாவட்ட துணைத் தலைவர் லோகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.