கோபி, ஆக. 12 - கோபிசெட்டிபாளைத்தில் உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற 14வது தேசிய பாரம் பரிய நெல் திருவிழாவை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிர வன் தொடங்கி வைத்தார். பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சி யாகவும், இயற்கை வேளாண் வழியில் நஞ்சில்லா உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் கிரியேட் நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற 14வது ஆண்டு தேசிய நெல் திருவிழாவின் ஒரு பகுதியாக ஈரோட் டில் பாரம்பரிய விதை நெல் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், காட்டுயாணம் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, தூயமல்லி, சீரகசம்பா, இலுப்பைபூசம்பா, சொர்ண மசூரி, ஆத்தூர்கிச்சலி சம்பா, கருங்குருவை பவானி, காலம் நமக்கு உட்பட 174 பாரம்பரிய நெல் விதைகள் காட்சிப் படுத்தப்பட்டது. இந்த பாரம்பரிய நெல்களைக் குறித்தும் அதன் மருத்துவ குணங்கள் மற்றும் பயிர் செய்யும் முறைகள் குறித்தும் பாரம்பரிய நெல்லினால் ஏற்படும் நம்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்விழாவை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் கிரியேட் தலைவர் துரைசிங்கம், உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் துணைத்தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் வேளாண்மை நேர்முக உதவியாளர் முருகேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மேலும் பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகள், மஞ்சள் கரும்பு விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கீழ்பவானி முறைநீர் பாசன சபை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.