tamilnadu

img

கட்டாய இணைய வழித் தேர்வை திரும்ப பெறுக மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை 17- கட்டாய இணைய வழித் தேர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தி இந் திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  

சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து இந்திய ராணுவத்தில் தமிழர்களின் பங்கு, தந்தை பெரியார், திருக் குறள் மற்றும் சிலப்பதிகாரம் போன்ற  பகுதிகளை நீக்கியதைக் கண்டித்தும், யுஜிசி வெளியிட்டுள்ள கல்லூரி மாண வர்களுக்கான கட்டாய இணைய வழித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

கல்லூரி மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் மதிப்பெண்கள் அடிப் படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.

அமேசான் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கல்லூரி மாணவர்களுக்கான தேர் வினை இணைய வழியில் நடத்து வதற்கு ஒப்புதல் அளித்த யூஜிசி மற்றும் மத்திய அரசை கண்டித்து வெள்ளி யன்று தமிழகம் முழுவதும் இந்திய  மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்ட தலைவர் மா.வினிஷா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு யுஜிசி தேர்வு நடத்த வெளியிடப்பட்ட நகலை எரித்து, கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.  

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், மாவட்ட தலைவர் கே.பகத் சிங், மாவட்ட செயலாளர் ஆர்.கவின் ராஜ், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தனர்.

கோவை

கோவை மாவட்டம், தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் அசாருதீன், மாவட்ட செயலாளர்  தினேஷ் ராஜா,  மாநில செயற்குழு உறுப்பினர் காவியா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.  திருப்பூர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சா.பிரவீன், மாவட்டச் செயலாளர் தெள.சம்சீர் அகமது, மாநில துணைத்தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம், மாரவாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாவட்ட துணைத்தலைவர்  நா. தமிழமுதன், நிர்வாகிகள் முருகே சன், நவநீதகிருஷ்ணன், தமிழரசு உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.