tamilnadu

இலவச தையல் பயிற்சி

ஈரோடு, ஏப். 28- ஈரோடு கனரா வங்கியின் சார்பில் அளிக்கப்படும் இலவச தையல் பயிற்சியில் சேர்ந்து பெண்கள் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் கே.சுதர்சன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஈரோடு கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சார்பில் மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 7 ஆம் தேதிவரை பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாம்நடைபெறவுள்ளது. ஈரோடு-கரூர் சாலை கொல்லம்பாளையம் ஆஸ்ரம் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழில் எழுதப், படிக்க தெரிந்த 18 முதல் 45 வயதுக்கு பெண்கள், மகளிர் குழுவினர் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு கட்டணம் ஏதுமில்லை. மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0424-2400338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

;