tamilnadu

img

பாசன வாய்க்கால் நகராட்சி கழிவுகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மனு

கோபிசெட்டிபாளையம், பிப். 19- கோபிசெட்டிபாளையம் பகுதியில் செல்லும் தடப் பள்ளி பாசன வாய்க்காலின் கிளை வாய்க்காலான சிங்கி யம் கிளைவாய்க்காலில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி சாக்கடைக் கழிவுகள் நேரடியாக கலப்பதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமனிடம் விவசாயிகள் மனு அளித்தனர். ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை என இரு பாசனவாய்க்கால்கள் மூலம் 24504 ஏக்கர் விளைநிலங்கள் நேரடிபாசனம் பெற்று வருகின்றன. இதில், தடப்பள்ளி வாய்க்கால் கோபிசெட் டிபாளையம் பகுதியில் செல்கிறது. இந்த வாய்க்காலில் இருந்து சிங்கியம் என்ற கிளைவாய்க்கால் கோபிசெட் டிபாளையம் நகராட்சிக்கு அருகில் செல்கிறது. இந்த சிங்கி யம் கிளைவாய்க்காலில் கோபிசெட்டிபாளையம் நக ராட்சி சாக்கடைக் கழிவுகள் பத்துக்கும் மேற்பட்ட இடங்க ளில் நேரடியாக கலப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி யுள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குடிமரா மத்து பணியின் மூலம் ரு.40 லட்சம் செலவில் தூர்வாரப் பட்ட தடப்பள்ளியின் சிங்கியம் கிளைவாய்க்காலில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் திடக்கழிவுகள் கலப்பதால் ஆகாயத்தாமரை, குதிரைக்குளாம்பு கொடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் பாசனத்திற்கு நீர் திறக் கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் கடைக்கோடிக்கு தண்ணீர் வரவில்லை. இக்கழிவுகள் கலப்பதினால் வயல்களில் பணியாற்றும் விவசாய கூலியாட்களுக்கும், விவசாயிகளுக்கும் தோல் அரிப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுவருகின்றனர். இதனால், கோபிசெட்டிபாளை யம் நகராட்சி நிர்வாகம், சிங்கியம் கிளைவாய்க்காலில் கலக்கும் சாக்கடைக் கழிவுகளை சுத்திகரிப்பு செய்தும் மறு சுழற்சி முறையில் வெளியிட வேண்டும் என கோபிசெட்டி பாளையம் கோட்டாட்சியர் ஜெயராமனிடம் விவசாயிகள் புகார் மனுஅளித்தனர்.