tamilnadu

தனியார் குடோனில் இருந்து அமில வாயு வெளியேறியதால் பரபரப்பு

 ஈரோடு, ஜூலை 3- ஈரோடு சாஸ்திரி நகர், வாய்க்கால் மேட்டில் தனி யார் கெமிக்கல் குடோன்   10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தக் குடோ னை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள் ளன. இந்நிலையில் புத னன்று காலை கெமிக்கல் குடோனில் இருந்து நைட் ரிக் அமில வாயு வெளியே றியது. இதனால் அப்பகு தியை சுற்றி கடும் துர்நாற் றம் வீசியதுடன், சுவாசிக்க முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.  இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மயில் ராஜு தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு  சென்று வாயு வெளியேறு வதை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கெமிக் கல் குடோனை சுற்றி சாஸ் திரி நகர், பாரதிநகர், குமரன் நகர் என நூற்றுக்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன. ஏற்கனவே இந்த குடோ னால் பல்வேறு பிரச்சனை களை அனுபவித்து வருகி றோம். இந்நிலையில் புத னன்று காலை குடோனில் இருந்து நைட்ரிக் அமில வாயு கசிவு ஏற்பட்டு வெளி யேறியுள்ளது. இதனால் கடும் துர்நாற்றமும், சுவா சிக்க முடியாமல் அவதிப் பட்டு வருகிறோம். எனவே இந்த குடோனை உடனடி யாக இங்கிருந்து அகற்ற வேண்டும்  என்றனர். தீய ணைப்பு வீரர்கள் தொடர்ந்து வாயு கசிவை சரி செய்யும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். முன் னெச்சரிக்கை நடவடிக்கை யாக சூரம்பட்டி காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வரு கிறது.