tamilnadu

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

ஈரோடு,நவ.24- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் மேல் மதகுகள் வழியாக  உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. 105 அடி உயரம்  கொண்ட பவானி சாகர் அணை, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் கடந்த  நவம்பர் 8 அன்று 105 அடி நீர்மட்டத்தை எட்டியது. இதனால் அணையின் மேல்மதகுகள் வழியாக பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை குறைந்ததால் மேல் மதகுகளில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஞாயிறன்று காலை  நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105 அடியாக உள்ளது. அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 600 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 100 கனஅடி நீரும் என மொத்தம் 2 ஆயிரத்து 700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

;