tamilnadu

img

டாக்டர் அம்பேத்கர் 129ஆம் பிறந்த நாள் அனுசரிப்பு

 ஈரோடு, ஏப்.15-டாக்டர் அம்பேத்கர் 129ஆவது பிறந்த நாள் ஞாயிறன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா மற்றும் ஈரோடு தாலுகா நசியனூர்,திண்டல், காரப்பாறை, மேற்குபுதூர், விருமாண்டம்பாளையம், ஊனாத்திபுதூர், மொடக்குறிச்சி தாலுகா சிவகிரி, அந்தியூர், பெருந்துறை தாலுகா வாவிக்கடை உள்ளிட்ட ஊர்களில் டாக்டர் அம்பேத்கர் படம் வைத்து பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஈரோடு மாவட்டத் தலைவர் மா.அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் பி.சுந்தரராஜன், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னையன், செயலாளர் சங்கரன்,மணியன், ராஜு, தீஒமு ரவி, பாலசுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து, கொடுமுடி செயலாளர் கனகவேல், அந்தியூர், ஏ.கே.பழனிச்சாமி, அண்ணாதுரை உள்ளிட்டோர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்த நாள் அனுசரித்தனர். 

;