tamilnadu

img

திமுக பிரமுகர் கைது - சிறை முன்பு ஆர்ப்பாட்டம்

கோபி, ஜூன் 1- திமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோபிச்செட்டிபாளையம் சிறை முன்பு அக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திமுகவின் கோவை தெற்கு மாவட்ட செயலாளரான தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் ஆகியோர் சமூக வலைதளத்தில் தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக கூறி சனியன்று இரவு கைது செய்யப்பட் டனர். இதன்பின் கைது செய்யப்பட்ட இருவரும் ஞாயி றன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த திமுகவினர் சிறை யின் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் ட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

;