பேரூராட்சிப் பகுதிகளுக்கு 100நாள் வேலைத் திட்டத்தை அமல் படுத்தக்கோரி ஊஞ்சலூர் பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கே.சண்முக வள்ளி, தாலுகா தலைவர் ஆர்.சிவலிங்கம், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் சசி, தாலூகா செயலாளர் கே.பி.கனகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஊஞ்சலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று பேருராட்சி செயல் அலுவலரிடம் 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.