tamilnadu

img

அடமானம் வைத்த மஞ்சள் மூட்டைகளைத் திருப்பித்தர கூட்டுறவு கடன் சங்கம் மறுப்பதாக புகார்

கோபி, ஜூன் 10- கோபி அருகே அக்கரை கொடி வேரி தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் மஞ்சள் மூட்டை களை அடமானம் வைத்துக் கடன் பெற்று கடனைத் திரும்ப செலுத்திய பிறகும் மஞ்சள் மூட்டைகளை ஒப்ப டைக்க மறுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள அக்கரை கொடிவேரியில் பகுதியில் விவசாயம் செய்து வருபவர் பழனிசாமி. இவர் அதே பகுதியில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தில் 2012-2014 ஆம் ஆண்டுகளில் தனது நிலத்தில் விளைந்த 113 மஞ்சள் மூட்டைகளைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காகவும் வைத்துள்ளார். அதேபோல் 2015-2017 ஆம் ஆண்டு களில் விளைந்த 99 மஞ்சள் மூட்டை களையும் அதே கூட்டுறவு கடன்சங்கத் தில் வைத்துள்ளார். இவ்வாறு 212 மஞ் சள் மூட்டைகளை அடமானமாக வைத்து கடந்தாண்டு ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளார். தற்போது அடமானக் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத் தியுள்ளார். இந்நிலையில், தனது பெய ரில் 56 மஞ்சள் மூட்டைகள் மட்டுமே உள்ளதாகவும், அதை மட்டுமே திருப்பி தருவதாகவும் கூட்டுறவு கடன் சங்கத் தின் செயலாளர் நடராஜ் தெரிவிப்ப தாக விவசாயி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  இப்பிரச்சனை குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூட்டு றவு அதிகாரிகளுக்கு புகார் அளித்துள் ளார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. எனவே ஐந்து நாட்களுக்கு முன்பு கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனினும் காவல் துறையினர் புகாரைப் பதிவு செய்ய மறுத்து வருவதாகவும் விவசாயி பழனிசாமி வேதனை தெரிவித்துள் ளார். எனது மஞ்சள் மூட்டைகளை எனக்குத் திருப்பித்தர அரசு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் தனது குடும்பத்தினரு டன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி யுள்ளார். இப்பிரச்சனை குறித்து அக்கரை கொடிவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் நடராஜிடம் கேட்டபோது, ஒரு நப ருக்கு ரூ.3 லட்சம் மட்டுமே கடன் பெற முடியும் என்ற நிலையில், பழனிசாமி மற்றும் அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து பழனி சாமிக்குச் சொந்தமான மஞ்சள் மூட்டைகளை அவர்களுக்கு வேண் டப்பட்டவர்களின் பெயர்களில் வைத் துக் கடன் பெற்றுள்ளனர். தற்போது மகேந்திரன் விபத்தில் உயிரிழந் துள்ளதால் பழனிசாமி அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மஞ்சள் மூட்டைகளைத் திருப்பிக் கேட்கிறார். 212 மஞ்சள் மூட்டைகளுக்கு உரிய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தி னால், அனைத்து மூட்டைகளையும் திருப்ப ஒப்படைப்பதாகவும் தெரிவித் துள்ளார்.