tamilnadu

img

தோழர் டி.கே.நல்லப்பன் நினைவேந்தல்

ஈரோடு, ஜூலை 27- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி யின் மூத்த தலைவரும், பெருந்துறை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான டி.கே.நல்லப்பனின் முதலா மாண்டு நினைவஞ்சலி ஞாயிறன்று ஈங்கூரில் அனு சரிக்கப்பட்டது. இதில் ஏஐடியுசி மாநில செயலாளர் சின்னசாமி கலந்து கொண்டு திருவுருவ படத்தை திறந்து வைத்தார். சுபாஷ் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் மு.தங்கமணி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் சிபிஐ சென்னிமலை ஒன்றிய  செய லாளர் நாகப்பன், கண்ணுசாமி, எஸ்.முத்துசாமி, மு.கண்ணம்மாள், மாணிக்கம் மற்றும் லோகேஷ் உள் ளிட்ட பலர் பங்கேற்று, மறைந்த தலைவருக்கு புக ழஞ்சலி செலுத்தினர்.

;