tamilnadu

சுமைப்பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு 

 ஈரோடு, ஜூன் 30-  ஈரோடு மாவட்ட சுமைப்பணியாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் 25 ஆவது மாவட்ட மகாசபை ஈரோடு டி.பி.எம்.நினைவகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் டி.தங்கவேலு தலைமை வகித்தார். சுமைப்பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.அர்த்தநாரி, பொருளாளர் ரங்க நாதன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்.ரகு ராமன், என்.முருகையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

புதிய நிர்வாகிகள் 
இதைத்தொடர்ந்து சுமைப்பணியாளர் சங்கத்தின்  மாவட்ட தலைவராக டி.தங்கவேலு, பொதுச்செயலாள ராக எம்.அர்த்தநாரி, பொருளாளராக ரங்கநாதன் ஆகி யோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.