tamilnadu

img

கோபியில் சாதி மறுப்பு திருமணம்: மணமகன் மீது கொடூரத் தாக்குதல்

கோபி, அக். 3- கோபிசெட்டிபாளையத்தில் காதலித்து திரும ணம் செய்து கொண்ட மணமக்களை அழைத்த பெண் வீட்டார், மணமகளை சிறை பிடித்ததுடன் மணமகன் மற்றும் நண்பர்களை கொலை வெறிதாக்குதல் நடத் திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார்பாளைத்தைச் சேர்ந்த வர் அசோக். இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அதே வங்கியில் பணி யாற்றும் நைனாம்பாளையத்தைச் சேர்ந்த சௌந்திர நாயகி என்ற பெண்ணை காதலித்து கடந்த மாதம் 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இரு வரும் வெவ்வெறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்ப தால் பெண் வீட்டில் ஏற்றுகொள்ளவில்லை. இந்நி லையில், காவல்துறையின் அறிவுரையோடு மணமக் களை அசோக் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். அதுசமயம், மணமகளின் தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக் கூறி மணமக்களை பெண் வீட்டு உறவினர்கள் அழைத்துள்ளனர். அதனை நம் பிய மணமக்கள், அவரது நண்பர்களுடன் நைனா பாளைத்திற்கு ஒரு காரில் சென்றுள்ளனர்.

அப்போது மணமகளை வீட்டினுள் அழைத்து சிறைபிடித்த உற வினர்கள் மணமகன் அசோக் மற்றும் அவரது நண்பர் களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து தப்பிய அவர்கள் கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்ப வம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.