ஈரோடு மாவட்டம் தளவாடி மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் 1 கிலோ முட்டைகோஸை 1 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் கேட்பதால் விளைநிலங்களிலேயே டிராக்டர் மூலம் முட்டைகோஸ்களை அழித்து .விவசாயிகள் வேதனை
தாளவாடி மலைக் கிராமங்களில் தற்போது சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 3 மாத பயிரான முட்டைகோஸ் நன்றாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில் மொத்தமாகக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஸை ஒரு ரூபாய்க்குக் கேட்பதால் இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் பலர் விற்க மனமின்றி டிராக்டர் மூலம் நன்றாக வளர்ந்துள்ள முட்டைகோஸ்களை செடியோடு அழிக்கின்றனர்.
இடைத்தரகர்கள் இல்லாமல் வேளாண்மைத் துறை மூலம் மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளை அரசே முறையான விலைக்குக் கொள்முதல் செய்து அதை உழவர் சந்தைகளில் விற்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.