tamilnadu

img

சக்தி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

அந்தியூர், ஆக. 19-  ஆகஸ்ட் மாதம் அரைத்த கரும்பு பணத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சக்தி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட் டனர்.  ஆறு மாத காலமாக வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை ரூ.70 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.

விசாயிகள் குடும் பத்தினருக்கு கொரோனா கால நிவார ணமாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை  முன்பு கரும்பு விவசாயிகள் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், தமிழ்நாடு கரும்பு சங்கத் தின் மாவட்ட தலைவர் கோபிநாத், மாவட்ட செயலாளர் முனுசாமி, சக்தி சர்க்கரை ஆலை கரும்பு வளர்ப்போர் செயலாளர் சென்னியப்பன் மற்றும் பொன்னையன், கார்த்திகேயன், முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.