கோபி, நவ. 2- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளத் தூர் கிராமப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலைமறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர் ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பேரூராட்சிக் குட்பட்ட பளத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமம் குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையின் அருகில் உள்ளது. இதனால் வாணிப்புத்தூர் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுகளை யும், இறைச்சிக்கழிவுகள் மற் றும் மருத்துவக்கழிவுகள் என அனைத்தையும் பள்ளத்தூர் கிரா மத்தின் அருகில் செல்லும் உபரி நீர் ஓடையின் கரைகளில் கொட் டப்படுகிறது. இதனால் பள்ளத் தூர் கிராமத்தில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், இங்கு செயல்ப டும் ஆரம்பப்பள்ளி அருகில் பல மாதங்களாக தேங்கி உள்ள தண்ணீரில் அசுத்தம் ஏற்பட்டு புழுக்கள் பெருமளவு உற்பத்தி யாகி வருகிறது. இதனால் பள்ளிக் குழந்தைகள் ஐந்துக்கும் மேற்பட் டோருக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல், பொதுக்கழிப்பறைக்கு மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு இல்லாமல் அவதிப் பட்டு வருகின்றனர். இதுதொடர் பாக பல முறை பேரூராட்சி நிர்வாகத்திற்கும், ஊராட்சி ஒன் றிய அலுவலகத்திற்கும் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நட வடிக்கையும் இல்லை எனக்கூறி அக்கிராமத்திற்கு வரும் நகரப் பேருந்தைஅக்கிராமமக்கள் சிறைபிடித்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பங் களாபுதூர் காவல்துறையினர் மற்றும் வாணிப்புத்தூர் பேரூ ராட்சி அலுவலர்கள் போராட் டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக் களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த் தையில் குப்பைகளை அப்புறப் படுத்தி தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதாகவும், அடிப் படை வசதிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் வாணிப் புத்தூர் பேரூராட்சிகுட்பட்ட பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.