புன்செய்புளியம்பட்டி, பிப். 16- புன்செய்புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மாணவ, மாணவியர்க ளுக்கு கை கழுவுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் முத்து தலைமை வகித்தார். விடி யல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் பங்கேற்று பேசும் போது, ’கை கழுவுதல் என்பது ஒரு சிறிய செயல்தான். அதை முறையாகச் செய்ய வேண்டும். இதை முறையாகச் செய்யாத தால்தான் பல தொற்று நோய்கள் ஏற்ப டுகிறது. சாப்பிடுவதற்கு முன்னும், பின் னும், விளையாடிய பிறகு, கழிப்பறை சென்று வந்த பிறகு, வாகனம் ஓட்டி வந்த பிறகு என எந்தச் செயலைச் செய்த பின்னும் கைகளை முறையாகக் கழுவ வேண்டும். அதோடு செல்போன், லேப்டாப், கம்யூட் டர் பயன்படுத்திய பிறகும் வீட்டில் வளர்க் கும் நாய், பூனை போன்ற செல்லப்பிரா ணிகளுடன் விளையாடிய பிறகும் கண்டிப் பாக கைகழுவாமல் சாப்பிடக்கூடாது. கை கழுவுதல் என்பது தண்ணீரில் கை கழுவுவது அல்ல. சோப்பு போட்டு கைகழுவுவதுதான் முறையான கைகழுவுதல் ஆகும். இதன் மூலம் நமக்கு வரும் நோய்களை வராமல் தடுக்க முடியும். கைகளை அவசரமாக 3 விநாடிகளில் கழுவி விடக்கூடாது. 30 விநா டிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என் றார் . இதைத்தொடர்ந்து ‘’தினமும் சோப்பு போட்டு கைகழுவும் பழக்கத்தைக் கடைபிடிப்பேன். கை கழுவும் முறையை பிறருக்கு சொல்லிக் கொடுப்பேன். அதோடு கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி அதன் நன்மையைப் புரிய வைப்பேன்.’’ என மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள்,பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.