ஆயுதபூஜையை முன்னிட்டு ஏடிஎம் இயந்திரத்தை கழுவி சுத்தம் செய்த நிகழ்ச்சி வங்கி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
மதத்தின் பெயரில் சில பழக்க வழங்கங்கள் கடைப்பிடிப்பது வழக்கம். அப்படியே ஆயுதபூஜை அன்று வேலைக்கு பயன்படும் பொருட்களை சுத்தம் செய்து சாமி கும்பிட்டால் அந்த தொழில் விருத்தியடையும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்து மதத்தை சேர்ந்த பலரும் அவரவர் முறைப்படி நேற்று ஆயுதபூஜையன்று தொழிலுக்கு தேவைப்படும் பொருட்களை சுத்தம் செய்து வைத்து வணக்கினர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் - பெருந்துறை சாலையில் இயங்கி வரும் தனியார் வங்கி ஏடிஎம்ல் உள்ள காவலாளியும் ஆயுதபூஜைக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அப்படி ஈடுபட்டிருக்கையில் தான் காவல் காக்கும் ஏடிஎம் இயந்திரத்தையும் சுத்தம் செய்து கழுவ வேண்டும் என்ற எண்ணத்தில் ஏடிஎம் இயந்திரத்தின் மீது தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளார். பின்னர் பூஜையும் செய்திருக்கிறார்.
இதையடுத்து அந்த ஏடிஎம் இயந்திரம் பழுதாகியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த காவலாளி நாம் எல்லாவற்றையும் சாரியாகத்தானே செய்தோம் ஏன் கடவுன் நம்மை சோதிக்கிறது என புலம்பியிருக்கிறார். இதை அறிந்த வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்த உடனடியாக ஏடிஎம்மை மையத்திற்கு சென்று ஏடிஎம் இயந்திரத்தைச் சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.