tamilnadu

img

ஈரானில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 54 பேர் பலி

ஈரானில் கொரோனா பாதிப்பில் சிக்கி இன்று ஒரே நாளில் 54 பேர் பலியாகி உள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவைத் தொடர்ந்து இத்தாலி ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 113000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் 54 பேர் பலியாகி உள்ளனர். 
இது குறித்து ஈரான் சுகாதாரத்துறை  செய்தித்தொடர்பாளர் கூறும்போது ஈரானில் கோவிட் - 19 காய்ச்சலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 54 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட் - 19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானில் கொரோனா பாதிப்புக்கு ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். மேலும் புதிதாக 881 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஈரானில் கரோனா வைரஸால் இதுவரை 8,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.