tamilnadu

img

ஈரானில் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு

ஈரானில் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரொஹானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைந்தது. இதனால், ஈரானுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில்  2400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரொஹானி இன்று தெரிவித்துள்ளார். மேலும், 80 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் சுரக்கும் இந்த பெட்ரோல் வயல் தொடர்பான கண்டுபிடிப்பை ஈரான் மக்களுக்கு அரசு அளிக்கும் பரிசு எனவும் ரொஹானி குறிப்பிட்டுள்ளார்.