tamilnadu

img

இலங்கையில் கடும் மழை: 80 ஆயிரம் பேர் பாதிப்பு

கொழும்பு, செப்.25- இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையால் 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாம் நிலையம் தெரிவிக்கின்றது. 20,815 குடும்பங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலியில் வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்தார் என்றும் 6 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாம் குறிப்பிடுகின்றது.

பிரதான வீதிகள், குறுக்கு வீதிகள், வீடுகள்,  வர்த்தக நிலையங்கள், மதத்தலங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமை யினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்கள் பலவற்றில் வெள்ள நீர் தேங்கியமையினால் வாகன போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தன.. இலங்கையில் எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.