tamilnadu

img

இலங்கை: தேவாலயம் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு

இலங்கையில் இன்று மீண்டும் தேவாலயம் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இலங்கையில் ஈஸ்டர் தினமான நேற்று நடந்த 8 தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் குண்டு வெடிப்பு நடத்த இடங்களில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்து இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனா அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொச்சிக்கடை கந்தானையில் உள்ள தேவாலயம் அருகே இன்று மாலை குண்டு வெடிப்பு நடந்துள்ளது. வெடிகுண்டுகள் அடங்கிய வாகனத்தை கைப்பற்றிய போலீசார், குண்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.


இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.


;