tamilnadu

img

இலங்கை தொடர்குண்டு வெடிப்பு: வர்த்தகத்துறை அமைச்சரின் சகோதரர் கைது

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர்குண்டு வெடிப்பில் தொடர்புடைய இலங்கை வர்த்தகத்துறை அமைச்சர் பதியூதின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்ததடுத்து 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 253 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பேற்று பாதுகாப்புத்துறை செயலர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று இலங்கை காவல்துறை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதைத்தொடர்ந்து குண்டு வெடிப்பு தொடர்பாக இன்று இலங்கை வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியூதின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அமலில் உள்ள நிலையில் வர்த்தக அமைச்சரின் சகோதாரர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


;