tamilnadu

img

இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு - அதிபர் சிறிசேனா உத்தரவு

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டு இருந்த அவசர நிலையை நீட்டித்து அதிபர் மைத்திரி பால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி அன்று ஈஸ்டர் பண்டிகையின் போது 3 தேவாலயங்கள் உட்பட பல்வேறு இடங்களில், பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில், 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு தான காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டி, அந்த அமைப்பை தடை செய்தது. 

இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் அவசர காலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் முப்படைகளின் சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இலங்கையில் பிறப்பிக்கப்பட்டு இருந்த அவசர நிலையை, ஒரு மாத காலம் நீட்டித்து அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.