tamilnadu

ஏப். 30 வரை இலவச சுற்றுலா விசா இலங்கை அறிவிப்பு

கொழும்பு,ஜன. 2 குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கான நுழைவு இசைவை (விசா) வரும் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரை இலவசமாக வழங்கவிருப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்து ள்ளது. இதுகுறித்து வியாழ னன்று (ஜன.2) அந்நாட்டு  சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறிய தாவது: கடந்த ஆண்டு நடை பெற்ற ஈஸ்டர் தின பயங்கர வாதத் தாக்குதலுக்குப் பிறகு, இலங்கையின் சுற்று லாத் துறை மிகவும் வீழ்ச்சிய டைந்துள்ளது. எனவே அந்தத் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும்  பயணிகளுக்கு, அதற்கான விசாக்களை கட்டணமின்றி வழங்க முடிவு செய்துள் ளோம்.வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை இத்தகைய இலவச சுற்றுலா விசாக்கள் விநியோகிக்கப்ப டும். ஏற்கெனவே அறிவிக்கப் பட்ட இந்த திட்டம் இடையில் நிறுத்திவைக்கப்பட்டி ருந்தது. எனினும், சம்பந்தப் பட்டவர்களின் வேண்டு கோளை ஏற்று, இந்தத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவிருக்கிறோம் என்றார் அவர். இலங்கை யில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்கு தலுக்குப் பிறகு, இலவச சுற்றுலா விசா திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

;