tamilnadu

img

சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய இளைஞா் கைது


தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே கெச்சிலாபுரத்தைச் சோ்ந்த பச்சைகிளி மகன் சிவா என்ற வேல்ராஜ் (25). இவா், குளத்தூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த ஒரு நபரின் பெயரை பதிவிட்டு அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவ விட்டுள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
    விசாரணையில், சமூக வலைதளத்தில் வெளியான தகவல் வதந்தி என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வட்டார சுகாதார மேற்பார்வையாளா் ரசல்ராஜ் அளித்த புகாரின்பேரில், குளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் செல்லத்துரை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் வதந்தி பரப்பியதாக சிவா என்ற வேல்ராஜை ,போலீசார்  கைது செய்தனா்.

;