மதுரை, ஏப்.12- வேளாங்கண்ணியிலி ருந்து ஒட்டன்சத்திரத்துக்கு நடந்தே வந்த குடும்பத்தினருக்கு காவல்துறை யினர் உணவு வழங்கி மற்றும் கையில் இருந்த பணத்தையும் கொடுத்து சொந்த ஊருக்குச் செல்ல உதவி புரிந்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில் மஞ்சம்பட்டி தற் காலிக காய்கறி மார்க்கெட் அருகே நடந்து வந்த ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஒரு சிறுமி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை வழிமறித்து பாதுகாப்புப் பணியில் இருந்த மணப்பாறை காவல்துறை யினர், ஆயுதப்படை காவல்துறை யினர் 15 பேர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், வேளாங்கண்ணிக்கு செங்கல் சூளை தொழிலுக்கு சென்றதாக வும் வேலை இல்லாததால் மீண் டும் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத் திற்கு ஒன்பது நாட்களாக நடந்து வருவதாகவும் இரண்டு நாட்களாக பசியில் இருப்பதாகவும் கூறி யுள்ளனர். இதையடுத்து காவல்துறை யினர் அவர்களுக்கு உணவு வழங்கி யும், செலவுக்கு கையிலிருந்த பண த்தை கொடுத்தும் அந்த வழியாக வந்த லாரியில் ஏற்றி சொந்த ஊரில் இறக்கிவிட்டுவிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். மேலும் மணப்பாறை காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கவும் கூறினர்.