கடலூர், மே 3- நலவாரிய உதவியை வழங் கும் அரசின் அறிவிப்பில் தமிழ கம் முழுவதும் 46 லட்சம் தொழி லாளர்கள் ஏமாற்றம் அடைந் துள்ளனர். இவர்களுக்கு விதி யில் திருத்தம் செய்து நலவாரி யத்தில் பதிவு செய்துள்ள அனை வருக்கும் கொரானா நிவாரணம் வழங்க வேண்டும் என தொழி லாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பி னால் இந்தியா முழுவதும் ஊர டங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ் வாதாரம் முழுவதுமாக பாதிக்கப் பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ கத்தில் 17 தொழிலாளர் நலவாரி யங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும், மேலும் கட்டுமானம், அமைப்புசாரா ஓட்டு னர் நலவாரியம், ஓய்வூதியர்கள், வெளிமாநில தொழிலாளர்க ளுக்கு கூடுதலாக தலா 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, சமையல் எண்ணைய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் உதவித் தொகைக்காக ரூ. 270 கோடி மட் டுமே நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில் பதிவு செய்யப் பட்டுள்ள தொழிலா ளர்கள் அனைவ ருக்கும் இந்த உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களில் பல லட்சம் தொழிலா ளர்கள்பதிவு புதுப்பிக் கப்படவில்லை, ஆதார் எண் இணைக்கப் படவில்லை, ரேசன் கார்டு, வங்கி கணக்கு எண் இணைக் கப்படவில்லை எனக் கூறி சிலருக்கு மட்டுமே நிவாரணமும் உதவித் தொகையும் வழங்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரி வித்துள்ளன.
இதுகுறித்து சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் பி.கருப்பை யன் கூறுகையில், தமிழகத்தில் கட்டுமானம், அமைப்புசாரா ஓட்டு நர், தையல், முடிதிருத்துவோர், உணவு சமைப்போர், ஓவியர் கள், மண்பாண்டம் தயாரிப்போர், பொற்கொல்லர், பாதையோர வியாபாரிகள் என 17 தொழிலா ளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வாரியங்க ளில் சுமார் 73 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் தற்போது சுமார் 27.04 லட்சம் தொழி லாளர்களுக்கு மட் டுமே நிவாரண உதவித் தொகை யாக ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள் ளது. அதில் கட்டு மானத் தொழிலாளர் கள் 12,13,822 பேர், ஓட்டுனர்கள் 83,500 பேர், மற்ற 15 தொழிலா ளர் நலவாரியத்தைச் சேர்ந்த வர்கள் 14,07,130 பேர். தமி ழகத்தில் கட்டுமானத் தொழிலா ளர், ஓட்டுனர் நலவாரியங்களில் மட்டும் 31 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மற்ற நலவாரி யங்களில் சுமார் 42 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் 27 லட்சம் பேருக்கு மட்டுமே நிவா ரண உதவித் தொகை அறிவிக் கப்பட்டுள்ளது. அதிலும் 50 விழுக் காட்டினருக்கு மட்டுமே பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டுள்ளது. மீதமுள்ளவர்க ளுக்கு உதவித்தொகை வழங் கப்படவில்லை.
எனவே எந்தவிதமான வேலை வாய்ப்பும் இல்லாமல் அவதிப்ப டும் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க, பதிவு செய் யப்பட்டு நிவாரணம் கிடைக்காமல் உள்ள 46 லட்சம் பேருக்கும் நிவார ணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.