tamilnadu

img

காவிரி படுகை நீர்ப்பாசன திட்டங்களை புதுப்பிக்க

ரூ.700கோடி ஒதுக்கீடு

சென்னை,நவ.29- காவிரி படுகையில் உள்ள மூன்று நீர்ப்பாசன திட்டங் களை புதுப்பிக்க 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீர்வள, நிலவள திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள மூன்று நீர்ப்பாசனத் திட்டங்களை புனரமைக்க 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, நொய்யல் ஆற்றை புதுப்பிக்க 230 கோடி ரூபாயும், ராஜ வாய்க்கால் பாசனப்பணிக்கு 184 கோடி ரூபாயும், கட்டளை உயர்மட்ட நீர்ப்பாசனப்பணிக்கு 335 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.