விழுப்புரம், செப்.30- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்து சிதறி யதில், இருவர் உடல் சிதறி உயிரி ழந்தனர். 9 பேர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டிவனத்திலிருந்து சென்னை - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு வாகனம் ஒன்று, காலை 8 மணிக்கு வடவனூர் என்ற இடத்தில், சாலை யோர பஞ்சர் கடையில் நிறுத்தி ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றிய தாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்த தில் சரக்கு வாகனம் சுக்கு நூறாக நொறுங்கியது. பட்டாசு வெடிப்பின் தாக்கத்தால், அரை கிலோ மீட்டர் தூரம் வரை இருந்த கடைகள், வீடுகளில் கதவு ஜன் னல்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கின. அரசுப் பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைந்தது. தேநீர் கடை ஒன்று முற்றிலும் சிதைந்தது. இந்த விபத்தில் இரு வர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி, சிதறி உயிரிழந்தனர். உடல் உறுப்புகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ள னர்.
தீக்காயங்களுடன் மீட்கப் பட்ட அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவ லைக்கிடமாக உள்ளதாக கூறப் படுகிறது. வெடித்து சிதறிய வெடிகளில் வீராசாமி பயர் ஒர்க்ஸ், புதுச்சேரி அடியாள் என்று அச்சிடப்பட்டுள் ளது என்றும் சரக்கு வாகனத் தின் பதிவெண் புதுச்சேரி என்றும் இருந்ததால் அங்கிருந்து பட்டாசு கள் கொண்டு வரப்பட்டிருக்க லாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து செஞ்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர் களிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஜெயக்குமார், சரக்கு வாக னத்தின் ஓட்டுநரும், உதவியாள ரும் விபத்தில் உயிரிழந்து விட்ட தாகக் கூறினார். வெடி ஆலை உரிமையாளரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவ தாகவும் அவர் தெரிவித்தார்.