tamilnadu

img

ஒரே நாளில் மூவர் பலி: அபாயத்தில் சென்னை

சென்னை, மே 8- கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை யில் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் ராயபுரம் மண்டலம் முதலி டத்தில் இருந்து வந்தது. பின்னர் திருவிக  நகர் அதை பின்னுக்குத்தள்ளி முதலி டத்தை பிடித்து மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், கோடம்பாக்கம் மண்டலம் திருவிக நகரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு வந்துள்ளது. இதற்கிடையே, சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயதான கோயம்பேடு சந்தை வியாபாரி ஒருவர் சிகிச்சை பல னின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரி ழந்தார். வைரஸ் தாக்கத்திற்கு கோயம்பேடு  சந்தை வியாபாரியின் முதல் பலியாகும் இது.

மேலும் தாம்பரத்தைச் சேர்ந்த 78 வய தான முதியவர் ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் உயிரிழந்தார். மேலும் ஒரு பெண்  என மூன்று பேர் ஒரே நாளில் சென்னை யில் உயிரிழப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே சென்னை மாநகரம்  வைரஸ் தொற்றில் தொடர்ந்து முதலி டத்தில் இருந்த போதிலும், ஊரடங்கு உத்த ரவில் இருந்து சில தளர்வுகள் கொடுக் கப்பட்டதால் சென்னை மாநகரம் வழக்கம்போல் மக்கள் கூட்டம் அலை மோதும் பகுதியாக மாறி இருக்கிறது.  எந்தப் பகுதியிலும் அரசு அறிவித்த தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவ தில்லை. இதனால் வைரஸ் தொற்று மேலும்  அதிகரிப்பதற்கு ஆட்சியாளர்களே வழி வகை செய்து கொடுத்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அமைந்து இருக்கிறது.