tamilnadu

img

திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி. சாமி காலமானார்

சென்னை
திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி. சாமி காலமானார் வடசென்னையின் முக்கிய நகரான திருவொற்றியூர் பகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் கே.பி.பி. சாமி (59). திமுகவைச் சேர்ந்தவரான இவர் கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல் மிகவும் மோசமாக நிலையில் இருந்தது. இதனால் மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கே.பி.பி. சாமி திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் வியாழனன்று காலை 6.10 மணியளவில்  மரணமடைந்தார். 

அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். கே.பி.பி. சாமி இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், கலைஞர் ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சகராவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;