tamilnadu

img

இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: அமைச்சர்

சென்னை, மார்ச் 21-  தமிழகத்தில் நாளை (ஞாயிறு) ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறி வித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில்  மார்ச் 22 அன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி யுள்ளார்.   மக்கள் தங்களை தனிமைப் படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் ஞாயிறு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பேருந்துகள்,ரயில்கள் ஓடாது என்றும், மார்க்கெட்டுகள், கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில்  டாஸ்மாக் கடைகள் நாளை (ஞாயிறு) ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

;