நாடு முழுவதும் பாதிப்பு 75 ஆயிரத்தை எட்டியது
புதுதில்லி, மே 13- கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு 50-ஆவது நாளை (புதன்)எட்டிவிட்டது. நாடு முழுவதும் இதுவரை 75 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வமாக 74,281 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். 2,415 பேர் உயிரிழந்துள்ளனர். 24,386 பேர் குண மடைந்துள்ளனர் மகாராஷ்டிராவில் 24,427 பேரும், தமிழகத்தில் 8,718 பேரும், குஜராத்தில் 8,903 பேரும், தில்லியில் 7,639 பேரும், இராஜஸ்தானில் 4,126 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 3,986 பேரும், மேற்குவங்கத்தில் 2,173 பேரும், ஆந்திராவில் 2,090 பேரும், பஞ்சாபில் 1,914 பேரும், தெலுங்கானாவில் 1,326 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குவங்கம்
மேற்கு வங்காளத்தின் ஹூக்ளியில் போர்க்கப்பல் கட்டும் தளமான கொண்ட ஜி.ஆர்.எஸ்.இ.எல் பிரிவில் அதிகபட்சமாக 41 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் புதன்கிழமை 64 பேருக்கு தொற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 3,728 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளவில், மே 12-ஆம் தேதி நிலவரப்படி, 2,83,271 பேர் உயிரிழந்துள்ளனர். 40,98,018 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.