tamilnadu

img

ஆவின் முக்கிய அறிவிப்பு

சென்னை, ஏப்.6- கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாதாந்திர பால் அட்டைகள் குறித்து ஆவின் விடுத்துள்ள அறிக்கையில் ‘ஆவின் பால் அட்டைகள் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இடைவேளையின்றி தொடர்ந்து விற்கப்படும்; அத்துடன் 1800-425-3300 என்ற கட்டணமில்லா எண்ணில் வாடிக்கையாளர்கள் தொடர்பு தகவல் தந்தால், பணம் பெற்றுக்கொண்டு புதிய ஆவின் அட்டை தரப்படும்.

மேலும் சென்னையிலுள்ள வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களிலும் பெறலாம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;