tamilnadu

img

அகவிலைப்படி உயர்வை ரத்துசெய்யக்கூடாது: திருமா.

சென்னை, ஏப். 25- மத்திய அரசு ஊழியர்களுக்கான அக விலைப்படியை ரத்து செய்யக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்க மாக வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்து மோடி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 21 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு நிதி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் கார ணமாக நாட்டின் அனைத்துத் தரப்பினரும் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகி வரு கின்றனர். இந்த நேரத்தில் மத்திய அரசு ஊழி யர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக அவர்களுக்குரிய அகவிலைப்படியைப் பிடித்தம் செய்வது எவ்விதத்திலும் ஏற்புடை யது அல்ல.

இந்த ஆண்டுக்கான மத்திபட்ஜெட்டில் பிரதமருக்கான புதிய வீடு கட்டும் 'சென்ட்ரல்  விஸ்டா' திட்டத்துக்கு 20,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே புல்லட் ரயில் திட்டத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி  ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கி றது. இப்படியான திட்டங்களை நிறுத்தி வைத்து அதைப் பயன்படுத்தினாலே ஏழை எளிய மக்களுக்கு தாராளமாக நிதி உதவி செய்ய முடியும் என்று பொருளாதார வல்லு னர்கள் கூறுகின்றனர். இந்த ஆடம்பரத் திட்டங்கள் எதையும் நிறுத்திவைக்க முன்  வராத மோடி அரசு இப்போது ஒரு கோடிக்கும்  அதிகமாக உள்ள மத்திய அரசு ஊழியர்க ளின் அகவிலைப்படியைப் பறித்து உத்தர விட்டிருக்கிறது. இது அநீதி ஆகும். எனவே, இந்த முடிவை ரத்து செய்து மத்திய அரசு  ஊழியர்களுக்குச் சேரவேண்டிய அக விலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

மோடி அரசு பதவியேற்றதும் தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் பாது காப்புச் சட்டங்களையெல்லாம் ரத்து செய்து விட்டு ஐந்து சட்டங்களாக அறிவிப்புச் செய்தது. அதற்கான மசோதாக்கள் மக்கள வையில் அறிமுகப்படுத்தப்பட்டார் பின்னர்  நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப் பட்டு உள்ளது. இதனிடையில்  இந்த மசோதாக்  களை அவசர சட்டங்களாகப் பிறப்பிப்ப தற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து  வருகிறது. இந்த புதிய சட்டத் தொகுப்புகளில் ஏற்கனவே தொழிலாளர்களுக்கு இருந்த  பல்வேறு பாதுகாப்புக் கூறுகள் அகற்றப்பட்டு  தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பல ரும் குற்றம் சாட்டி உள்ளனர். 

இந்நிலையில், இத்தகைய தொழிலாளர்  விரோத சட்டங்களை அவசர சட்டங்களாகப்  பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன? மோடி  அரசு கொரோனா நோய்த்தொற்று சூழலைப்  பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர் உரி மைகளைப் பறிப்பதற்கு திட்டமிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொழிலாளர் விரோத, அரசு ஊழியர்களுக்கு எதிரான இத்தகைய முயற்சிகளை மோடி அரசு கைவிட வேண்டும். இல்லையேல், நாடு முழுதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.