tamilnadu

img

தமிழகம் முழுவதும் விவசாயத் தொழிலாளர் ஆவேச போராட்டம்

குடிமனை, 200 நாள் வேலை கொடு

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான
விவசாயத் தொழிலாளர்கள்.

சென்னை,அக்.11- குடிமனை இல்லாமல், குடியிருக்கும் இடத்திற்குப் பட்டா இல்லாமல் காலங்காலமாக கிராமப் புற மக்கள் பல்வேறு வகைப்பட்ட புறம்போக்கு இடங்களிலும், நீர்நிலை, சாலை உள்ளிட்ட இடங் களிலும் கடும் நெருக்கடியுடன் சுகா தாரமற்ற இடங்களில் அல்லல்பட்டு வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து மனைப்பட்டாக்கள் வழங்குவ தாக அறிவித்து வருவதற்கும் நடை முறைக்கும் சம்மந்தமில்லாமல் போனதால் தமிழகத்தில் சுமார் 35 லட்சம் பேர் வீட்டுமனையின்றி உள்ளனர். 

தமிழகத்தில் தற்போது அரசா ணை 318-ஐ அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நீர்நிலை நீங்கலாக இதர புறம்போக்கு இடங்களான மந்தை, மேய்க்கால் உள்ளிட்ட புறம்போக்கு இடங்களுக்கு மனைப்பட்டா வழங்கிடவும், நீர்நிலை புறம்போக் கில் குடியிருப்போருக்கு, மாற்று  இடம் அளித்து அதில் வீடுகட்டி குடியமர்த்தவும் இந்த அரசாணை யில் கூறப்பட்டுள்ளது. அதை அரசு  உறுதியுடன் நிறைவேற்றிட வலி யுறுத்தியும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் படி 60 வயதைக் கடந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டிய அரசு, பல பகட்டு அறிவிப்புகளை செய்து புரோக் கர்கள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் மூலமாக பயனாளிகளை தீர்மானித் திடும் முயற்சியில் ஈடுபட்டு வரு கிறது. அதை கைவிட்டு, எவ்வித நிபந்தனையுமின்றி முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டு மெனவும், முன்னுரிமை சார்ந்த, சாராத குடும்ப அட்டைகள் என தரம்  பிரித்து ஒரு பகுதி பயனாளி களை பொதுவிநியோகப் பட்டிய லிலிருந்து விடுவிக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளதைக் கைவிட வேண்டும். 

கிராமப்புற மக்கள் அனை வருக்குமான பொதுவிநியோக திட்டமாக தொடருவதுடன், மேலும் விரிவுப்படுத்த கேட்டும், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக் கடி கிராமப்புற மக்களை மேலும் துய ரத்திற்கு உள்ளாக்குகிறது. விவ சாய வேலைகள் முற்றிலும் குறைந்துவிட்ட நிலையில், மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட நாட்களை 200 நாட்களாக வும், தினக்கூலியை ரூ.400 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு கட்டித்தருவ தாக அறிவிக்கப்பட்ட 1 லட்சம் வீடுகள் கட்டும் பணியை உடன் துவங்க வேண்டும்.
 

மேற்கண்ட  கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் 150-க்கும்  மேற்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மற்றும் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட  ஆட்சியர் அலுவலகங்களிலும் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் போராட்டத்தை சீர்குலைக்கும் விதத்தில் வருவாய்துறையும், அதிகாரிக ளும் போராட்டம் அறிவிப்பு செய்த பிறகு பட்டா, ஓய்வூதியம் வழங்குகிறேன் என்று  போராட்டத்தை திசைத்திருப்ப முயற்சித்த னர். இருந்த போதிலும் நடைபெற்ற இப்போ ராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். 

சில வட்டாட்சியர் அலுவலகங்களில்  நடை பெற்ற பேச்சுவார்த்தையில் பட்டா, ஓய்வூதி யம் அளிப்பதற்கான உறுதிமொழியை அதி காரிகள் அளித்தனர். சிவகங்கை வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போதே 5 முதியோருக்கான ஓய்வூதியத் தொகை வழங்குவதற்கான ஆணையை வழங்கினர்.  நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற மனு அளிக்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கடலூரில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, மாநிலத்தலை வர் ஏ.லாசர்  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரிலும், மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் சேலம் மாவட்டம் சங்ககிரி யிலும், பொருளாளர் எஸ்.சங்கர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலும், மாநிலச் செய லாளர் எம்.சின்னதுரை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலும் பங்கேற்றனர்.  போராட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். 40 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர்.