tamilnadu

img

74 வயது மூதாட்டி குணமடைந்தார்

சென்னை,ஏப்.9-  சென்னை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த 74 வயது மூதாட்டிக்கு  மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், கடந்த 26ஆம் தேதி சென்னை அரசு  பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம்,  சர்க்கரை நோய் பாதிப்புடன் இருந்த அவருக்கு கொரோனா தொற்றும்  உறுதியானது. தீவிர சிகிச்சையில் குணமடைந்த அவர் வீடு திரும்பி னார். கல்லூரி முதல்வர் ஜெயந்தி, மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி, டாக்டர் ரகுநந்தன் உள்ளிட்ட குழுவினர் பழக்கூடை கொடுத்து அவரை வழியனுப்பி வைத்தனர்.