tamilnadu

img

கண்ணீர் சிந்தும் இளநீர் வியாபாரிகள்

சென்னை ஏப்.10- ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலை யில், சென்னையில், சாலையோரம் இளநீர் விற்பனை செய்யும் வியாபாரிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கோடைக் காலத்தில் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பத்தைத் தணிக்க இளநீர் விற்பனை செய்வோர் தள்ளு  வண்டிகளில் இருப்பதைக் காண முடியும்.  தற்போது, கொரோனா வைரஸ் தொற்று பரவ லைத் தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

 முன்பு போல் மழையும் இல்லாததால் இளநீர் வரத்தும் குறைந்து கொண்டே இருக்கி றது. அத்தகைய சூழலிலும் மக்களின் சூட்டைத் தணிக்க இளநீர் வியாபாரம் நடப்ப துண்டு. ஆனால், தற்போது இளநீர் இருக்கி றது, குடிக்க மக்கள் தான் இல்லை. வெயி லில் வெந்து வாடுவது இளநீர் மட்டும் அல்ல இளநீர் வியாபாரிகளும் தான். இதுகுறித்து இளநீர் வியாபாரி ஒருவர் கூறுகையில், “அரசு 144 தடை விதித்த பின்னர்  இளநீர் வாங்குவதற்கு மக்கள் அதிகம் வருவ தில்லை. எங்கள் வீட்டின் உணவு தேவை யைப் பூர்த்தி செய்யும் அளவு கூட விற்பனை  இல்லாமல் போய்விட்டது. அரசும் எங்களை கண்டுகொள்ளவில்லை” என்கிறார். தினந்தோறும் வியாபாரம் செய்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் தங்க ளின் வாழ்வாதாரம் ஊரடங்கினால் பெரிய பாதிப்பிற்குள்ளாகியுள்ளதால், அரசு ஏதே னும் ஒரு வகையில் எங்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்கின்றனர் இளநீர் வியாபாரிகள்.