இலங்கைகடற்படையினரால் தமிழக மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை 80 விசைப்படகுகளில் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
இதில் ஜெகதாப்பட்டினம் விஜயேந்திரனுக்குச் சொந்தமான விசைப்படகில், ராமு(40), சின்னையன்(40), ஜேசு(49), விஜயேந்திரன் உட்பட ஐந்து மீனவர்கள் சென்றனர். புதனன்று மாலை அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 5 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரும் காங்கேசன் துறைமுகம் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.