அரக்கோணம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் அடுத்த தண்டலத்தில் தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பள்ளி மாணவ மாணவிகள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை தொடர்ந்து வேன் ஓட்டுநர் நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் காவல் துறையினர் நடத்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.