புதுச்சேரி, ஆக. 25- சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை திரும்பப்பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதேச தலைவர் ஜெய பிரகாஷ், செயலாளர் விண்ணரசன் ஆகி யோர் முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்று புதுச்சேரி யில் வேகமாக பரவி வரும் சூழலில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுத்துறை சட்டக் கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பல்கலைக்கழகம் கடந்த ஜூன் மாதம் இறுதி ஆண்டைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேர்வை ரத்து செய்து உள் மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்தது. அடுத்த ஒரு சில தினங்க ளில் இறுதி ஆண்டு தேர்வும் ரத்து செய்யப்பட்டது. அதே போன்று இந்திய பார் கவுன்சில் இந்தாண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இறுதி ஆண்டை தவிர மற்ற மாணவர்கள் முந்தைய தேர்வோ அல்லது உள்மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி செய்யுமாறு வழிகாட்டியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் பல்வேறு மாநி லத்தை சேர்ந்த கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது தொற்று வேகமாக பரவவே வழிவகுக்கும். மேலும் புதுச்சேரி சட்டக்கல்லூரியில் காரைக்கால், மாகே, அந்தமான், லட்சதீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் பயின்று வருகிறார்கள். பொதுப் போக்கு வரத்து சீராகாத சூழலில் பல்கலைக்கழகம் தேர்வு அறிவித்துள்ளதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள வழக்கு இறுதி ஆண்டு தேர்வை நடத்துவதா? நடத்த வேண்டாமா? என்பதே. அண்டை மாநிலமான தமிழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரி களுக்கான தேர்வுகள் நடத்துவது குறித்து எவ்வித முடிவுகளும் எடுக்காத சூழலில் மத்திய பல்கலைக்கழக்தின் அறிவிப்பு மேலும் பாதகமான சூழலை உருவாக்கும். மத்திய பல்கலைக்கழகம் அவசரகதியில் வெளியிட்ட தேர்வு அட்டவணையை திரும்ப பெறவும், இறுதி ஆண்டை தவிர மற்ற வகுப்புகளுக்கு உள்மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி செய்யவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிர தேசக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.